Sunday, October 18, 2015

ஒரு நாள் பழச்சாறு டயட்!

Sent via WhatsApp by Gopi

நர்ஸ் சம்பளம் ஒரு லட்சம்! சவுதி வேலைக்கு அரசு அழைப்பு


Sent via WhatsApp by Pari

DA increase government order


Sent via WhatsApp Kavitha L

FNA Duties

Mission Indradhanush


Mission Indradhanush was launched by Ministry of Health and Family Welfare (MOHFW) Government of India on 25th December, 2014. The objective of this mission is to ensure that all children under the age of two years as well as pregnant women are fully immunized with seven vaccine preventable diseases.

The Mission Indradhanush, depicting seven colours of the rainbow, targets to immunize all children against seven vaccine preventable diseases, namely:

Diphtheria
Pertussis (Whooping Cough)
Tetanus
Tuberculosis
Polio
Hepatitis B
Measles.
In addition to this, vaccines for Japanese Encephalitis (JE) and Haemophilus influenzae type B (HIB) are also being provided in selected states.

First Phase of Mission Indradhanush:

For the first phase, 201 high focus districts across 28 states in the country that have the peak number of partially immunized and unimmunized children were identified by the Government.

There were total four rounds in the first phase of the mission. The first round of the first phase was started from 7th April, 2015 and continued for more than a week.

Further, second, third and fourth rounds were held for more than a week in the month of May, June and July starting from 7th of each month. The first phase of this mission was very successful.

The main highlights of the first phase of Mission Indradhanush are as given below:

Total 9.4 lakh sessions were organized during these four rounds of Mission Indradhanush
About 2 crore vaccines were given to the children as well as pregnant women.
Tetanus Toxoid vaccine was given to more than 20 lakh pregnant women
75.5 lakh children were vaccinated and about 20 lakh children were fully vaccinated.  
More than 57 lakh zinc tablets and 16 lakh ORS packets were freely distributed to all the children to protect them against diarrhoea.
Second Phase of Mission Indradhanush

The second Phase of Mission Indradhanush has been started from 7th October, 2015. The second, third and fourth rounds of this phase will start from 7th November, 7th December 2015 and 7th January 2016. 

The aim is to achieve full immunization in 352 districts which includes 279 mid priority districts, 33 districts from the North East states and 40 districts from phase one where huge number of missed out children were detected.

Sent via WhatsApp by Kalaiselvi

மீசுரக் கண்டக் கொத்தளம்.

தென்னிந்தியாவின் மிக வெப்பமான நகரம்.

சுற்றிலும் கிழக்கு மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள நகரம்.

தமிழகத்தின் ஏழாவது பெரிய மாநகரம்.

மிகப் பெரும் சிறைச்சாலைகளைக் கொண்ட நகரம்.

தெற்காசியாவின் மிகப்பெரும் மருத்துவமனை உடைய நகரம்.

ஒரு மாநகராட்சியையும், ஆறு நகராட்சிகளையும் சுமார் 1 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட நகரம்.

தோல் பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாமிடத்தையும் பெற்ற நகரம்.

ஒரே ஊரில் மூன்று மலைக் கோட்டைகளையும் ஒரு தரைக் கோட்டையையும் உடைய நகரம்.

இது மட்டும்தானா?

வானளாவிய கற்களாலான மதிற்சுவர்கள்.

கண்களை மலைக்க வைக்கும் சுற்றளவு.

ஒரு கோட்டைக்குள் மற்றொரு கோட்டை போல் மூன்று கொத்தளங்கள்.

பல நூற்றாண்டு காலமாக அசையாமல் நிற்கும் உறுதி.

பல போர்களைக் கண்டு சளைத்து போன மனம்.

இப்படியெல்லாம் இருப்பது வேலூர் மாநகரம் ஒன்றுதான்.

வேலூர்க் கோட்டை :
திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட வேலூர் கோட்டைதான் அது.

தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த போர் அரண்களுடன் கட்டப்பட்ட கோட்டை இது.

விஜயநகரப் பேரரசின் வேலூர் மண்டலப் பகுதிகளுக்கான பாதுகாப்பு அரணாக இது வேலூரில் கட்டப்பட்டது.

அது மட்டுமல்ல. ராட்சசி - தங்கடிப் போரில் அதாவது தலைக்கோட்டைப் போரில் விஜயநகரம் வீழ்ந்த பின் அப்பேரரசின் அரசர்கள் முறையே தங்கள் தலைநகர்களை பெனுகொண்டா, சந்திரகிரி மற்றும் வேலூரில் அமைத்துக் கொண்டனர்.

இக்கோட்டை சுமார் நூறாண்டு காலம், பேரரசின் இறுதி அரசரான மூன்றாம் அரங்கனின் காலம் வரை தலைநகரக் கோட்டையாக இருந்தது.

சுற்றிலும் பாதுகாப்பு அரணாக சுமார் 64 அடி ஆழம் கொண்ட அகழியும், மரப்பாலமும் உயிரைக் கொல்லும் முதலைகளும் கொண்டு விளங்கியதாம் இக்கோட்டை.

ஆனால் பற்பல போர்களைக் கண்ட கோட்டையின் அகழி தற்போது ஒரு புறத்தில் தூர்ந்து விட்டது.

ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் நிரம்பி உள்ளது.

பொதுவாகவே கோட்டைகளுக்குப் பெயர் வைப்பது தமிழகத்தில் வழக்கமில்லை.

கோட்டைகள் இருக்கும் ஊரின் பெயரோ பகுதியின் பெயரோ வழக்கில் இருப்பது கண்கூடு.

எடுத்துக் காட்டாக மலையில் இருப்பது மலைக்கோட்டை.

புதிதாகக் கட்டப்படுவது புதுக்கோட்டை என்றெல்லாம் கூறலாம்.

ஆனால் இக்கோட்டைக்கு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அது வெயிலுக்குப் பேர் போன வேலூரில் வெயிற்காலத்தில் மட்டுமே தெரியும் வண்ணம் கோட்டை மதிலில் பொறிக்கப்பட்டுள்ளது.

கோட்டையின் மேற்குப் பகுதியில் நீருக்கடியில் தமிழிலும், கன்னடத்திலும் மீசுரகண்டக் கொத்தளம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை வேனிற்காலத்தில் காண முடியும்.

இக்கோட்டைக்குள் சுமார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேசுவரர் அல்லது ஜக்ஷரகரேசுவரர் கோவில் உள்ளது.

இந்து அரசர்களின் ஆட்சி முடிந்து இசுலாமிய நவாபுகளின் ஆட்சி தொடங்கிய பின்பு 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியும் உள்ளது.

பின் வெள்ளையர்களின் ஆட்சியில் 1806-ல் கட்டப்பட்ட கிறித்தவ தேவாலயமும் உள்ளது.

இக்கோட்டையை மும்மதச் சந்திப்பு என்றே கூறலாம்.

மேலும் திப்பு மகால், ஐதர் மகால் என்றழைக்கப்படும் அரண்மனைகளும், பாத்தி மகால், பேகம் மகால் என்று கூறப்படும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையைப் போன்ற தூண்களைக் கொண்ட இரு அரசவை மண்டபங்களும் உளளன.

ஆனால் பண்டைய மன்னர் ஆட்சியின் சுவடுகள் ஏதும் தெரியா வண்ணம் உள்ளிருந்த அனைத்துப் பகுதிகளும் அரசு அலுவலகங்களாக மாற்றப்பட்டிருந்தன.

கோவிலுக்குரிய தெப்பக்குளம் காவலர் பயிற்சிப் பள்ளியின் மைதானமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இங்கு பல்துறை அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது மாநில அரசின் தொல்பொருள் அருங்காட்சியகம், மத்தியத் தொல்பொருள் துறையின் அருங்காட்சியகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் ஒருபிரிவு ஆகியன நடைபெற்று வருகின்றன.

அகழியில் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ள படகு சவாரி நடக்கின்றது.

மாலை நேரத்தில் அலங்கார ஒளிவிளக்குகள் வீச கோட்டை காட்சி தருகின்றது.

ஜலகண்டேசுவரர் கோவில் திருவிழாக்கள், சித்திரை மாத புஷ்பப் பல்லக்கு, சுற்றிப் பார்ப்பதற்கு வரும் மக்கள் கூட்டம் எப்போதும் கோட்டையைக் கலகலப்பாக்குகின்றது.

நகரைச் சுற்றியுள்ள மலைச்சிகரங்களில் கட்டப்பட்டுள்ள சுக்ரோவ், சஜரோவ் முதலான மூன்று கோட்டைகளைப் பார்த்தபடி தன் பழம் பெருமைகளை நினைத்தபடி அண்ணாந்து நிற்கின்றது இந்த மீசுரக் கண்டக் கொத்தளம்.

முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் " ஒரு கோடி கர்ப்பிணி பரிசோதனை " மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் தகவல்

அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு முதன்மை செயலர்களுக்கும் கடிதம்.


நிதித்துறை - ஊதியகுழு - அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு முதன்மை செயலர்களுக்கும் கடிதம்.

தமிழக நிதித்துறை செயலரது
கடித விபரம்:கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு வழங்கிய ஊதிய விகிதத்தை மீண்டும் திருத்தியமைக்க தனிநபராகவும், சங்கங்கள் மூலமாகவும் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால்

'ஊதிய முரண்பாடுகள் ஆராய(Examining the Pay anamolies)- ஊதியக்குழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதியக்கட்டு விவரங்கள், குறிப்பிட்ட ஊதியக்கட்டில் துறை வாரியாக உள்ள ஊழியர்களது மொத்த எண்ணிக்கை, நிரப்பப்பட்ட இடங்கள், காலியிடங்கள், யார் அதிகார வரம்பிற்குட்பட்ட பதவி, கல்வித்தகுதி, பணி விபரங்கள் & பொறுப்புகள்' கோரி தமிழக நிதித்துறை செயலர் அனைத்து துறை அரசு செயலர்களுக்கும் - கடிதம்(08.10.2015)எழுதியுள்ளார்.

விரிவான துறை சார்ந்த ஊதியக்கட்டு (PAY BAND) தகவல்கள் - '30.11.2015அல்லது அதற்கு முன்பாகவே(on or before 30.11.2015)' துறை சார்ந்த செயலர்கள் தவறாது தொகுத்து அனுப்பி வைக்க கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

DA Increase

மத்திய அரசு ஊழியர்களைப் போன்றே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 113 சதவீதத்தில் இருந்து
119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்வு அளிக்கப்படும்.அதன்படி, மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இதற்கான கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன

தற்செயல் விடுப்பு.


1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய  தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர்  10 க்கு மேற்பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11)நாள் 16.08.93)

3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.

4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை2.12.77 ).

5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3மாதங்களுக்கு 2  நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )

6. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4  ப.ம.சீ துறை நாள்.17.1.83)

7.  குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.

8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4  ப.ம.சீ துறை நாள். 17.1.83) 

Sent via WhatsApp by U kannan

Tablet Giving Issue Discussion


[Ukannan]
DMS SIDE உள்ள தாலுகா மருத்துவமனைகளில் மதிய மற்றும் இரவு பணிகளில் வரும் அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளிக்கு மாத்திரைகள் வழங்க வேண்டியது யாருடைய கடமை?

[Ukannan]
செவிலியர்கள்தான் வழங்க வேண்டும் என ஏதேனும் ஆணை உள்ளதா?

[Umapathy]
அரசு மருத்துவமனை திண்டிவனத்தில் OP சீட்டு கூட செவிலியர் போட வேண்டும்.

இதனை மூத்த செவிலியர்கள் எதிர்க்கவில்லை.

JD வரை கொண்டு சென்றபோது "பிரச்சனை பன்றவங்கள ward போடாதீங்க" என  JD கூறினர்.

.
[Chandru]
Medical college hospital mundi villuppuram jannal thoranga room thoranga andha stool eduthu podunga solldranga appo INI varum kalangalil sindhippom seyal paduvom.

[Ukannan]
மூத்த செவிலியர்கள் பெரும்பாலான தாலுகா மருத்துவமனைகளில் எதையும் கண்டுகொள்வதில்லை. அதுவே நாம் அங்கு சிரமப்பட காரணம்.

[Chandru]
Thani manidanai edirthu kettal pointed seiya paduvom adanal Dan kandu kolvathillai

Otrumaikkana vaziyai thedungal

Alladu kodungal

[Umapathy]
டாக்டருங்க ஊசி போட மாட்டேன்னு சண்ட போடுராங்க.

ஆனா நம்மளால அடுத்தவர் வேலையை செய்ய மாட்டேன்னு சொல்லக்கூட முடியல.

[Chandru]
Manila seyar kuzu meeting arrange panni anga edukkura theermanatha all dean jd dd BMO Ns circular forward pannunga

Adha meerinakka nadavadikkaila iranguvom sollunga appa Evan vela vanguvan

Adhigara thushprayogam

Sangam vendum

[Geetha Krishnan]
5   + 1 chief pharmacist இருந்தால் கண்டிப்பாக இரவு பணி பார்க்க வேண்டும் அவர்கள் . 

5 மற்றும் அதற்கு குறைந்த எண்ணிக்யில் இருந்தால் சுழற்சி முறையில் இரவு 7 மணி வரை மாத்திரை குடுக்க வேண்டும் பார்மசிஸ்ட் .

[ Ukannan ]
நன்றி

[ Ukannan ]
அதை இங்கு பதிவேற்றம் செய்யமுடியுமா?

[Geetha Krishnan] கண்டிப்பாக

[Umapathy]
நன்றி.

யார் தான் இரவு மாத்திரை வழங்க வேண்டும்.

ஒரு வார்டில் 8 நோயாளிக்கு ஒரு செவிலியர் பணியில் இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் செவிலியர் இரவு பணி பார்க்க வேண்டாமா.

[Ukannan]
நன்றி பாரி

[Ukannan]
மிக்க நன்றி கீதா கிருஷ்ணா

[Geetha Krishnan,]

Ok brother ...அரக்கோணம் மருத்துவ மனையில் பிரச்சனை வந்த போது பாரிவள்ளல் அவர்கள் இந்த தகவலை பெற்று இப்போது பார்மசிஸ்ட்டை மாத்திரை குடுக்க செய்து நமது செவிலியர்களின் ஒற்றுமையை நிலை நிறுத்தியள்ளனர்.

[Gopi] இங்கு  குறிப்பிடுகின்ற. விவாதத்தில்,  மாத்திரைகொடுப்பது யார்?  

வார்டில் நாம்தான் கொடுக்கவேண்டும் ஆனால் புறநோயாளிகளுக்கு மருந்தாளுநர்  தான் கொடுக்க வேண்டும்.

நிறைய PHC யில் மற்றும்   ஒன்றோ அல்லது இரண்டுபேர் இருக்கும் இடத்தில் சிகிச்சையின் நிலை கருதி அவசரசிகிச்சைப் பிரிவு என்ற பேரில் நாம்தான் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக் கைதியாக இருக்கிறோம்.  கோபி.

[Manikandan]
மருந்தாளுனர் -செவிலியர் புரிந்தணர்வு ஒப்பந்தம் (status-quo) 1980க்கு முன்னால் போடபட்டது. அதன்படி தான் நாம் மருந்து கொடுத்து கொண்டு இருக்கிறோம்.
அது மாற்றபடவேண்டும்.
இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

[Ukannan]
அதற்கு முன்னர் வார்டுகளில் கூட மருந்தாளுநர்கள் தான் மருந்து மாத்திரைகள் கொடுத்ததாக செய்தி.

[Manikandan]
அதுதான் உண்மை. ஒரு பெட்டி வைத்து சாவி 2உண்டு.
1 நம்மிடமும்
2வது மருந்தாளுனர் இடம் இருக்கும்

[Deepa Srinivasan]
இரண்டு மருந்தாளுநர் இருக்கும் பட்சத்தில் அவர்கள் பணி பற்றி விளக்கவும்.

Tablet Giving Issue RTI Documents

Admin you could Land in trouble , Group content is your Headache, Says Law

Nursing Superintendent Grade 1 counseling.

[Anushya]
G1 covuncilling 14-10-2015

[SR Mohan]
Gr l conselling held on 14.10.2015 at dms upto panal list sl.no.68.pls convey this msg to all district

[Gopi]
14.10.2015. ல் நடைப்பெறுகி G l ல் 58 பேர் மட்டுமே நடைப்பெறுகிறது. 68. அல்ல.  68 என்பது  வரிசை எண்.  இதுதான் உறுதி  இறுதி தகவல். மா.கோபி.

இன்னும் சற்று நேரத்தில் G l கலந்தாழ்வு கூட்டம் நடைப்பெறவுள்ளது. மா.கோபி.

மருத்துவமனை

இந்த லோகத்தில் பெரிய ஆராதனை ஆலயம் மருத்துவ மனைகள் தான்.

இங்கு
இந்து,
கிருத்துவன்,
முஸ்ஸிலீம்,
ஜாதி,
ஏழை,
பணக்காரன்
என்ற முத்திரை இல்லாத ஆலயம்.

இங்கு உள்ள இரத்தத்திற்க்கு ஒரே நிறம்,
பிரிவினை இல்லை.

அரசியல் இல்லாத இடம்.

ஆறுபேக் ஜிம்      இளைஞனும் தோல்சுருங்கிய முதியவரும் ஒன்றுபொல கருதும் ஆலயம்.

ஒரே இடத்தில் பிறப்பும் இறப்பும் நிகழும் ஆலயம்.

மனிதனை மனிதனாக பார்க்கும் ஆலயம்.

தெய்வத்திற்க்கு அதிக வேலை உள்ளஆலயம் இதுவே.

இந்த ஆலயம் இப்பொமுது காசுக்காக அழிந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.

தெய்வமே இதை காப்பாற்ற அனைவருக்கும் அருளை வழங்கு.

ம.கோபி.

அரசு செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் செவிலியர் பற்றாக்குறை, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தவிப்பு


Sent via WhatsApp by Deepa Srinivasan

KEEP MOSQUITOES AWAY

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்.

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்.

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது.

உலகத்தில் முதன் முதலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்.

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கர்ப்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்களாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்.

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு.

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று.

அந்த நாடு தான் ----////----

Can any body guess ?

இஸ்ரேல்

WhatsApp ல் அனுப்பியவர் SR Mohan

நான்காவது தலைமுறைக்கு வைத்தியம் பார்க்கும் "அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு வயது 73"

DUTIES AND RESPONSIBILITIES NURSING STAFFS

"Dealing With Dengue" The traditional way

Sent By Elangovan

Condolences

நடிகர் திலகம் ஆச்சி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.


Sent via WhatsApp Arulkumar

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், அவர் மட்டுமே. தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது தான். அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’ அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: மே 26, 1943

பிறப்பிடம்: மன்னார்குடி, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: திரைப்பட நடிகை

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு 

கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்ட அவர், 1943  ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி என்ற இடத்தில் தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

வறுமை மற்றும் பல குடும்பப் பிரச்சனைக் காரணமாக, இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்தில் குடிபெயர்ந்தனர். தன்னுடைய பள்ளிப்படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் பெற்று விளங்கினார். ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு ரத்தப்போக்கு ஏற்படவே, தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார்.

நாடகத் துறையில் ஒரு பயணம்

ஒரு நாள் அவருடைய ஊரில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில்லை எனக் கருதி, மனோரம்மாவை அதில் நடிக்க வைத்தார்கள். அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை ‘மனோரமா’ என மாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார்.

திரைப்படத்துறையில் அவரது பயணம்

அவர், வைரம் நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடவே, அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விடவே, மிகவும் மனமுடைந்து போனார். இருந்தாலும், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 1958 ஆம் ஆண்டு ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார்.

கலையுலக வெற்றிப் பயணம்

தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு பிறகும், பல நாடகங்களில் நடித்து வந்த அவர், ‘மாலையிட்ட மங்கை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கொஞ்சும் குமரி’, ‘பாலும் பழமும்’, ‘பார் மகளே பார்’, ‘திருவிளையாடல்’, ‘அன்பே வா’,  ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘எதிர் நீச்சல்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஆயிரம் பொய்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘காசேதான் கடவுளடா’ எனத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.

1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்களின், ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று வரை சுமார் 1000 – த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில்’ தன்னுடைய பெயரை பதிவு செய்து, மாபெரும் சாதனைப் படைத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், தமிழ் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், மனோரமா மட்டுமே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ‘காட்டுப்பட்டிச் சரித்திரம்’, ‘அன்புள்ள அம்மா’, ‘தியாகியின் மகன்’, ‘வானவில்’, ‘ஆச்சி இன்டர்நேஷனல்’, அ’ன்புள்ள சிநேகிதி’, ‘அல்லி ராஜ்யம்’, ‘அவள்’, ‘ரோபோ ராஜா’, ‘மனுஷி’, ‘வா வாத்தியாரே’, ‘டீனா மீனா’ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘மாலையிட்ட மங்கை’, ‘புதிய பாதை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ரத்த திலகம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘அன்பே வா’, ‘கந்தன் கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘எங்கள் தங்கம்’, ‘காசேதான் கடவுளடா’, ‘அந்தமான் காதலி’, ‘வாழநினைத்தால் வாழலாம்’, ‘என் கேள்விக்கு என்ன பதில்’, ‘குப்பத்து ராஜா’, ‘பில்லா’, ‘காளி’, ‘தீ’, ‘வாழ்வே மாயம்’, ‘போக்கிரி ராஜா’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘அடுத்த வாரிசு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘நான் அடிமை இல்லை’, ‘அன்னை என் தெய்வம்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘பாட்டி சொல்லத் தட்டாதே’, ‘இது நம்ம ஆளு’, ‘குரு சிஷ்யன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சிங்கார வேலன்’, ‘அண்ணாமலை’, ‘எஜமான்’, ‘ஜென்டில்மேன்’, ‘வியட்நாம் காலனி’, ‘மே மாதம்’, ‘காதலன்’, ‘நந்தவனத் தேரு’, ‘நான் பெத்த மகனே’, ‘முத்துக் காளை’, ‘இந்தியன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘அருணாசலம்’, ‘மறுமலர்ச்சி’, ‘புதிய பாதை’, ‘பாண்டவர் பூமி’, ‘மாயி’, ‘சாமி’, ‘பேரழகன்’.

தனிப்பட்ட வாழ்க்கை

சபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

விருதுகளும், மரியாதைகளும்

தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’.
1988 – ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’.
2002 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ விருது’.
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக ‘கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்’ இடம்பெற்றுள்ளார்.
மலேசிய அரசிடம் இருந்து’ டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’.
கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’.
‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’.
சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ எனப் பல்வேறு விருதுகளை, தமிழ் நாடு அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.
சினிமா உலகில், நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனைப் படைக்க முடியும் என்று நிரூபித்தவர், மனோரமா அவர்கள். திரையுலக வரலாற்றில் 1000 படங்களுக்கு மேல் நடித்து, உலகப் புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை; இந்தியாவில் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என இன்னும் பல அடையாளங்களை இவருக்கு சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக சொல்லப்போனால், சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய காலம் முதல் இன்றைய தலைமுறை வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்தார் என்று கூறினால் அது மிகையாகாது

 WhatsAppல் அனுப்பியவர் ம.கோபி